இலங்கை: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் 06 வயது குழந்தை உயிரிழப்பு
களுத்துறை தெற்கில் ஒரு வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதலில் 06 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
சனிக்கிழமை இரவு (மார்ச் 29) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் வீட்டினுள் இருந்த 28 வயதுடைய ஒரு பெண்ணும் 06 வயதுடைய ஒரு குழந்தையும் காயமடைந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று குழந்தை உயிரிழந்தது.
(Visited 10 times, 1 visits today)





