இலங்கை

இலங்கையில் 06 மீனவர்கள் மாயம்!

யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 6 மீனவர்களை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 7ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட இரண்டு படகுகள் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம்  சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பலநாள் மீன்பிடிக் கப்பலில் நான்கு மீனவர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஒரு நாள் மீன்பிடி கப்பலில் இரண்டு மீனவர்கள் இருந்ததாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும், அவர்களை தேடுவதற்கு கடற்படை உட்பட அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content