இலங்கை

வெளிநாடுகளில் பணி புரிந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

வெளிநாடுகளில் பணி புரிந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்காக முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, விமான நிலையத்தில் வழங்கப்படும்  தீர்வு வரி நிவாரணத்தை  அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரண அதிகரிப்பு மே மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படுகிறது.

அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

தற்போது விமான நிலையத்தில் வழங்கப்படும்  சலுகைகளுக்கு மேலதிகமாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு மேலதிக விசேட  சலுகைகளை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்ததுடன் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்