இலங்கை செய்தி

வரி வருவாய் அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் வரி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 28.5% அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (12) பிற்பகல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை 1,229,245 மில்லியன் ரூபா வரி வருமானமாக வசூலித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் 956,418 மில்லியன் ரூபாவை சேகரிக்க முடிந்தது.

ஒருங்கிணைந்த மற்றும் இணைக்கப்படாத வருமான வரி, மதிப்பு கூட்டு வரி, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி, பந்தயம் மற்றும் சூதாட்ட வரி, பங்கு பரிவர்த்தனை வரி மற்றும் பிற வகை வரிகள் போன்ற பல வகையான வரிகளின் கீழ் உள்நாட்டு வருவாய் திணைக்களம் இந்த வரிகளை வசூலித்துள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!