செய்தி

லண்டனிலிருந்து சென்ற நிலையில் ஆட்டங்கண்ட விமானம் – தகவல் பெட்டி மீட்பு

 

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற நிலையில் நடுவானில் ஆட்டங்கண்ட சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தின் தகவல் பெட்டிகளைப் பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைப் பிரிவினால் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் தாட் தெரிவித்துள்ளார்.

விமானி அறையில் உள்ள குரல்பதிவுப் பெட்டியும், விமானத்தின் தகவல்பதிவுப் பெட்டியும் பெறப்பட்டதாகவும், விசாரணை நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர்க் குழு தாய்லந்து சென்று பதிவுப் பெட்டிகளைப் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

விமானம் ஆட்டங்கண்ட சம்பவத்தின்போது சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சிப்பந்திகளின் அர்ப்பணிப்பு உணர்வைப் பயணிகள் பலர் பாராட்டியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிப்பந்திகளும் ஆபத்தில் இருந்தபோதிலும், அவர்கள் பொறுப்பாக, பயணிகளைக் காப்பாற்றும் கடமை தவறாமலும் நடந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

விமானத்தில் என்ன நடந்தது என்பது முழுமையான விசாரணைக்குப் பிறவே தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!