ஐரோப்பா

ரஷ்யாமீது ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்த உக்ரைன் : விமான நிலையங்களை மூடிய ரஷ்யா!

ட்ரோன் தாக்குதல் காரணமாக  ரஷ்ய விமான நிலையங்கள் இரவு முழுவதும் தற்காலிகமாக மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் வான் பாதுகாப்பு பிரிவுகள் நேற்றிரவு அதன் பெல்கோரோட் எல்லைப் பகுதியில் 52 உக்ரேனிய ட்ரோன்களை அழித்ததாக மாஸ்கோ தெரிவித்துள்ளது.

88 ட்ரோன்கள் இரவு முழுவதும் ஏவப்பட்டதாகவும், எந்த பெரிய காயங்களோ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்றும் அது கூறுகிறது.

உக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்யாவின் வோரோனேஜ், அஸ்ட்ராகான், கிராஸ்னோடர், ரியாசான் மற்றும் குர்ஸ்க் பகுதிகளிலும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

வான் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மூன்று விமான நிலையங்கள் இரவு முழுவதும் பல மணி நேரம் போக்குவரத்துக்காக மூடப்பட்டதாக ரஷ்யாவின் விமான கண்காணிப்பு அமைப்பான ரோசாவியாட்சியா தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!