இலங்கை செய்தி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்ட அறிக்கை

நாட்டில் ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் மற்றும் அதன் தொடர்ச்சியான பாதிப்புகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி நவம்பர் 28, மாலை 6 மணி வரை 1,297 குடும்பங்களைச் சேர்ந்த 4,140 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்கவர்கள் தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு, சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.

வெள்ளம் காரணமாக ஒரு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், 85 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் புங்குடுதீவிலிருந்து குறிக்கட்டுவான் வரையான தரைப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நெடுந்தீவு, நயினா தீவு, எழுவை தீவு, அனலை தீவிற்கான படகு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அரியாலை, தொண்டைமானாறு, அராலி உவர் நீர் தடுப்பணைக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அருகில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காரைநகர் பாலத்தில் கடல் அலைகள் மேவுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இவ் இடர்காலப்பகுதியில் மக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்ப்பது நல்லது என்றும், அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நிறைமாதக் கர்ப்பிணித் தாய்மார்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று பாதுகாப்பாகத் தங்குமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

hqxd1

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!