ஐரோப்பா செய்தி

போர் களத்தில் வெடிமருந்து பற்றாக்குறையை எதிர்கொள்ளும் ரஷ்யா!

ரஷ்யா போர் முனையில் பீரங்கிக் குண்டுகள் பற்றாக்குறையை எதிர்க்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரெம்ளினின் ஆதரவு பெற்ற தளதி அலெக்சாண்டர் கோடகோவ்ஸ்கியின் அறிக்கையை மேற்கோள் காட்டி போர் ஆய்வுக்கான நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ரஷ்ய படைகள் இன்னும் பீரங்கிகளை அதிகமாக நம்பியிருப்பதாக ஐ.எஸ்.டப்ளியூ தெரிவித்துள்ளது.

ரஷ்யா பீரங்கி வெடிமருந்து பற்றாக்குறையுடன் போராடுவது, மொஸ்கோவை பலவீனப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரேனிய படைகள், ரஷ்யாவை விட மூன்றில் ஒரு பங்கு குண்டுகளை பயன்படுத்துவதாக வொஷிங்டன் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ரஷ்யா சீனா, மற்றும் வடகொரியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து வெடிமருந்துகளை பெறலாம் என நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!