பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விபரங்களைப் பகிர வேண்டாம் என எச்சரிக்கை
தற்போது நிலவும் பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள், காணொளி காட்சிகள் அல்லது தனிப்பட்ட விபரங்களை சமூக ஊடகங்கள் அல்லது முக்கிய ஊடக தளங்கள் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு குழந்தைகள் மற்றும் பெண்கள் விவகார அமைச்சகம் பொதுமக்களையும் ஊடக நிறுவனங்களையும் வலியுறுத்தியுள்ளது.
இதுபோன்ற தகவல்களைப் பகிர்வது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளம் மற்றும் தனியுரிமையை கடுமையாக சமரசம் செய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களின் விபரங்கள் மற்றும் படங்கள் கடத்தற்காரர்கள் அல்லது சட்டவிரோத நோக்கங்களுக்காக அவற்றைத் தவறாகப் பயன்படுத்தும் பிற குற்றவியல் நபர்களின் கைகளுக்கு செல்வதற்கும் வழிவகுக்கும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.
குழந்தை சுரண்டல் மற்றும் கடத்தல் உள்ளிட்ட செயல்களுக்கு இதுபோன்ற தகவல்களைப் பயன்படுத்தும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பேரிடருக்குப் பின்னரான குழந்தை கடத்தல் சம்பவங்கள் அல்லது அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நபர்கள் தொடர்பான தகவல்களை 1929 என்ற குழந்தை உதவி மைய சேவைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அல்லது அருகிலுள்ள பிரதேச செயலக அலுவலகத்தின் குழந்தை உரிமைகள் மேம்பாட்டு அதிகாரி அல்லது குழந்தை பாதுகாப்பு அதிகாரிக்கு தெரிவிக்குமாறு அமைச்சகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.





