இலங்கை

பாதாள குழுக்களுக்கு முற்றுப்புள்ளி! அமைச்சர் உறுதி!!

பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எத்தகைய சவால்கள் வந்தாலும் இந்த  விடயத்தில் பின்வாங்கப்போவதில்லை”என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படும். ஒழுக்க விழுமியமுடைய சமூகமொன்று உருவாக்கப்படும் என நாட்டு மக்களுக்கு நாம் உறுதியளித்துள்ளோம்.

அதற்கமைய நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது. அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபட்டு பொலிஸார் தற்போது சுயாதீனமாக செயற்பட்டுவருகின்றனர்.

இவ்வாறு சட்டம் தமக்குரிய கடமையை செய்யும்போது சிலருக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அத்தகையவர்களே கலக்கமடைந்து கத்துகின்றனர். எது எப்படி இருந்தாலும் பாதாளகுழு செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 30 ஆம் திகதி தேசிய வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது” என்றார்.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்