அரசியல் இந்தியா

திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதன் முறையாக பாஜக வெற்றி – மோடி நன்றி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதன் முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இதற்காக கேரள மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் யுடிஎப் மற்றும் எல்டிஎப் ஆகிய கட்சிகளால் மக்கள் வெறுப்படைந்துள்ளதாக தெரிவித்த அவர் நல்லாட்சியை வழங்கவும், அனைவருக்கும் வாய்ப்புகளைக் கொண்ட கேரளத்தை உருவாக்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே ஒரே வழியென மக்கள் தீர்மானித்ததாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இது மேலும் அவர் மேலும் பதிவிட்டிருப்பதாவது,

“திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக – தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை தருணம்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். திருவனந்தபுரத்தின் வளர்ச்சியை நோக்கி எங்கள் கட்சி பாடுபட்டு, மக்களின் வாழ்க்கையை எளிதாக்க ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
error: Content is protected !!