இந்தியா செய்தி

தற்காலிக கொட்டகையின் மீது மரம் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவின் தென்மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் தற்காலிக கொட்டகையின் மீது ஒரு பெரிய மரம் விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த போது பாதிக்கப்பட்டவர்கள் ஒரு கோவிலுக்கு வெளியே மத விழாவிற்காக கூடியிருந்தனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் தற்காலிக கட்டிடத்தின் மீது மரம் விழுந்ததில் 35 பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர்.

அப்பகுதி மக்கள், மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, இடிபாடுகளுக்கு அடியில் இருந்தவர்களை மீட்டனர்.

இதில் சிக்குண்டவர்களில்  ஏழு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!