டொனால்ட் ட்ரம்ப்பின் 10 பில்லியன் டொலர் வழக்கு: நீதிமன்றத்தை நாடிய பிபிசி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்த 10 பில்லியன் டொலர் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, பிபிசி (BBC) நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
2021-ம் ஆண்டு கேபிடல் கலவரத்தின் போது ட்ரம்ப் ஆற்றிய உரையை, பிபிசியின் ‘பனோரமா’ நிகழ்ச்சி தவறாகத் தொகுத்து வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
வெவ்வேறு நேரங்களில் பேசிய வார்த்தைகளை ஒன்றாக இணைத்து, வன்முறையைத் தூண்டியது போன்ற தோற்றத்தை பிபிசி உருவாக்கியதாக ட்ரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு ஏற்கனவே பிபிசி மன்னிப்பு கோரியிருந்தாலும், அமெரிக்க நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், எந்த உள்நோக்கத்துடனும் அந்த செய்தி வெளியிடப்படவில்லை என்றும் பிபிசி தற்போது தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தால் பிபிசி-யின் உயர்மட்ட அதிகாரிகள் பதவி விலகிய நிலையில், வழக்கின் விசாரணை 2027-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





