இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

டிட்வா புயல் – உலக வங்கியிடமிருந்து $120 மில்லியன் நிதியுதவி

இலங்கையில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பேரழிவுக்கு உலக வங்கி குழு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

இந்த பேரிடரை எதிர்கொண்டு இலங்கையர்கள் காட்டிய மீள்தன்மை மற்றும் உயிர்களை காப்பாற்றவும் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை அரசின் கோரிக்கையை தொடர்ந்து, உலக வங்கி குழு 120 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்குகிறது.
இந்த நிதி, நடப்பு உலக வங்கி திட்டங்களில் இருந்து மீளபயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளத.

இந்த உதவி மூலம், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரம், குடிநீர், கல்வி, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு சேவைகள் மீட்டெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனிடையே, உலக வங்கி குழுமத்தின் தனியார் துறை பிரிவான IFC, வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பொருளாதார மீட்சியை வேகப்படுத்தவும் விவசாயம், உற்பத்தி மற்றும் தளவாடத் துறைகளில் முதலீடு மற்றும் ஆலோசனை ஆதரவை தொடரும் என அறிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!