ஐரோப்பா

ஜெர்மனியில் அதிர்ச்சி – யுவதியை கொலை செய்த மாணவன்

ஜெர்மனி நாட்டில் சிறுவர் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன நிலையில் மற்றுமொரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கடந்த 23ஆம் திகதியன்று ரெக்ளின்கஸ் என்று சொல்லப்படுகின்ற பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை பின்புற வளாகத்தில் 19 வயதுடை பெண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவர்களே குறித்த பெண்ணின் சடதை்தை கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது இந்த மாணவர்கள் முதலில் இந்த பெண்ணானவர் பின் பகுதியில் தற்காலிகமாக நித்திரை கொள்வதாக நினைத்துள்ளனர்.

பின்னர் அவர்கள் அருகில் சென்று பார்த்த பொழுது 19 வயதுடைய பெண் இறந்த நிலையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த கொலையின் பின்னனியில் 17 வயதுடைய மாணவன் இருந்திருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை நடத்தி வருவதாக தெரியவந்திருக்கின்றது.

பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மனோவியல் ரீதியில் சிகிச்சை அளிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!