ஐரோப்பா செய்தி

சுவிட்சர்லாந்தில் தமிழர்களின் உலகலாவிய பொருளாதார மகாநாடு

தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன்  தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய  13வது  பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில்  டாவோஸ் (Switzerland Davos) நகரில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த சனிக்கிழமை சொலுத்தூர்ன் கன்டோன் ஓட்லன் நகரில் இடம்பெற்றது. உலகப்பொருளாதார மகாநாடு நடைபெறும் Davos  மண்டபத்தில் யூன் மாதம் 7,8,9ம் திகதிகளில்  இம் மகாநாடு நடைபெறவுள்ளது.

உலகத்தின் நாலா பக்கங்களிலிருந்தும் 40 ற்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து 600ற்கு மேற்பட்ட தமிழ் தொழிலதிபர்கள் இம் மகாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்மகாநாடு பற்றி தெளிவூட்டும் ஆரம்பக்கூட்டம் கடந்த சனிக்கிழமை சுவிஸ்நாட்டில் ஓல்டன் நட்சத்திரவிடுதியில் உலகலாவிய The RISE  நிறுவனத்தின் சுவிஸ்நாட்டிற்கான ஒருங்கினைப்பாளரும் தலைவருமான கலாநிதி சிறி இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.

இம்முன்னோடிக்கூட்டத்தில் ஐரோப்பிய சுவிஸ்நாட்டு தொழில் முனைவோர்களும், பலபுத்திஐீவிகளும், ஆர்வலர்களும் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

தமிழர்களின் டாவோஸ் பொருளாதார மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து 35ற்கு மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்துகொள்கின்றனர்.

அத்துடன் மகாநாட்டின் நிறைவுநாளில் இலங்கையிலிருந்து சுவிஸ்நாட்டுக்கு தமிழர்கள் இடம்பெயர்ந்த 40 ஆண்டுகளை நினைவு கூறும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி – வேதாந்தி

(Visited 48 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி