சிங்கப்பூரில் சிறுமியின் உயிரை பறித்த விபத்து – சிக்கிய பெண்
![](https://iftamil.com/wp-content/uploads/2024/01/inbound5538466611894674083-jpg.webp)
சிங்கப்பூர் – ரிவர் வேலியில் (River Valley) உள்ள இன்ஸ்டிடியூஷன் ஹில்லில் நடந்த விபத்தில் ஸாரா மெய் ஓர்லிக் என்ற நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து, தேடப்பட்டு வந்த விபத்து ஏற்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி சிறுமிக்கு மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 40 வயதுமிக்க பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன. இச்சம்பவம் கடந்த 23ஆம் திகதியன்று மாலை 4.55 மணியளவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டிடியூஷன் ஹில் வழியாக ரிவர் வேலி சாலையை நோக்கி சென்ற கார் மோதிய விபத்து குறித்து தகவல் கிடைத்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கி மயக்க நிலையில் இருந்த சிறுமி பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததாக பின்னர் தகவல் வெளியானது.