சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஏ.எஸ். எம் ரபீஸ் தெரிவு
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எஸ்.எம். ரபீஸ் இன்று (10) ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இத்தெரிவு, திருகோணமலை நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் முன்னாள் தலைவர் புனிதவதி துஷ்யந்தன் தலைமையில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தின் போது, சங்கத்தின் செயலாளராக சட்டத்தரணி பிரஷாந்தினி உதயகுமார் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






