இலங்கை செய்தி

கோட்டாபயவைத் விமானப்படையே தப்பிக்க வைத்தது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த 2022 ஆண்டு, ஜூலை மாதம் 13ஆம் திகதியன்று அதிகாலை, நாட்டில் இருந்து மாலைத்தீவுக்கு தப்பிச்செல்வதற்கான நிதியினை இலங்கை விமானப்படையே வழங்கியுள்ளமை தற்போது வெளிக்கொணரப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இதுவரை இந்த பயணத்திற்காக மேற்கொள்ளப்பட்ட செலவு குறித்து இலங்கை விமானப்படை இன்னமும் வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி, கொழும்பில் இடம்பெற்ற கோட்டா கோ கோம் (Gotta Go Home) என்ற மக்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக, ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகிய இரண்டையும் மக்கள் முற்றுகையிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் திகதி, கோட்டாபய ராஜபக்ச, மற்றும் அவரது மனைவியும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் மாலைத்தீவுக்கு இலங்கை விமானப்படை விமானத்தின் மூலம் நாட்டில் இருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இந்த பயணம் தொடர்பாக விபரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடக கோரப்பட்டிருந்தது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி, அரசாங்கத்தின் தலைவர் மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி என்ற அடிப்படையிலேயே, கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த அனுமதியை வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த அனுமதிக்கான ஆவணங்களை வெளியிடமுடியாது என இலங்கை விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

விமானப்படையின் போக்குவரத்துக்கள் இரகசிய தன்மை வாய்ந்ததாகவும்

எனவே அதற்கான ஒப்புதல் ஆவணத்தின் விபரங்களை வெளியிட முடியாது என்றும் விமானப்படை கூறியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content