கொழும்பில் இளைஞன் ஒருவரின் விபரீத முடிவு – தாயிற்கு கடிதம்

கொழும்பில் தாயிற்கு கடிதம் எழுதி வைத்துள்ள நிலையில் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு கோல்பேஸ் பகுதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் அந்த ஹோட்டலில் அறையில் ஒன்றில் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் அவர் உயிரிழப்பதற்கு முன்பு எழுதிய ஒரு கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், “மன்னிக்கவும், அம்மா, நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். நான் தினமும் நினைத்து வேதனைப்படுகிறேன்” என அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
(Visited 2 times, 1 visits today)