செய்தி

கால்பந்து உலகில் வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ!

கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

ரொனால்டோ இதுவரை கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்.

இவர் படைக்காத சாதனைகளில், எவராலும் தொட முடியாத ஒரு கிண்ணம் என்றால் அது உலகக் கிண்ணம் ஆகும்.

கிளப் போட்டிகளில் கிட்டத் தட்ட அனைத்து கிண்ணங்களையும் வென்று விட்டாலும், உலகக் கிண்ணத்தில் போர்ச்சுகல் அணி காலிறுதி வரை சென்றாலும், அதைத் தாண்டி அடுத்த கட்டமான அரை இறுதிப் போட்டிக்கு இது வரை தகுதி பெற்றதே இல்லை.

இந்தநிலையில், ரொனால்டோ கால்பந்து உலகில் புதிய சாதனை படைத்துள்ளார்.

நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 34ஆவது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார்.

இதன் மூலம் தற்போது வரை கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக மெஸ்ஸி 838 கோல் அடித்து 2ஆவது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!