செய்தி வட அமெரிக்கா

கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவோரைத் தடுக்க அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கை

கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

நேரடியாக அமெரிக்காவுக்குள் செல்லாமல், கனடாவுக்குள் நுழைந்து, பின் கனடா அமெரிக்க எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள் மக்கள். தற்போது, மெக்சிகோவிலிருந்து இதுபோல் அமெரிக்காவுக்குள் நுழைவோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதாவது, ட்ரம்ப் ஆட்சியின்போது அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் உயரமான உலோகத் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டது நினைவிருக்கலாம்.

மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய தடையாக சுவர் எழுப்பப்பட்டுவிட்டதால், தற்போது வேறொரு வழியைப் பின்பற்றுகிறார்கள் மெக்சிகோ நாட்டவர்கள்.அதாவது, சட்டப்படி விமானம் ஏறி கனடாவுக்கு வரும் மெக்சிகோ நாட்டவர்கள், பின்பு கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நடந்தே செல்ல முற்படுகிறார்கள்.மொன்றியல் அல்லது ரொரன்றோவிலிருந்து அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள்.

பிரச்சினை என்னவென்றால், குளிர் கடுமையாக இருப்பதால், இப்படி நடந்தே எல்லை கடக்க முயல்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும்.ஆகவே, இப்படி மக்கள் நடந்தே அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட எல்லைப் பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது அமெரிக்கா. அப்பகுதியில், தற்போது கூடுதலாக 25 பாதுகாப்பு ஏஜண்ட்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். இந்த நடைமுறை திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content