உலகம்

ஈரானின் புதிய வெளியுறவு அமைச்சராக அபாஸ் அராக்சி என்பவர் நியமனம்

ஈரானின் புதிய வெளியுறவு அமைச்சராக அபாஸ் அராக்சி என்பவரை அந்நாட்டு அதிபர் மசுத் பெஸஸ்கியன் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11ஆம் திகதி) அன்று நியமித்துள்ளார்.இதை ஈரான் நாட்டு நாடாளுமன்ற நாயகர் அந்நாட்டின் ‘ஸ்டுடண்ட் நியூஸ் நெட்வொர்க்’ என்ற ஊடகத்தளத்தில் அறிவித்தார்.

“நாளை முதல் அடுத்த வாரக் கடைசிவரை நாடாளுமன்ற அமைப்புகள் அமைச்சர்களாக பரிந்துரை செய்யப்பட்டவர்களின் திட்டங்களை பரிசீலிக்கத் தொடங்கும்,” என்று நாடாளுமன்ற நாயகர் முகம்மது பாக்கர் கலிபஃப் தெரிவித்தார். இந்நிலையில், அதிபர் பெஸஸ்கியனின் அமைச்சரவைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள திரு அராக்சி அனுபவமிக்க அரசதந்திரி என்று கூறப்படுவதுடன் இவர் 2013ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டுவரை ஈரான், உலக வல்லரசுகளுக்கு இடையிலான அணுவாயுதப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் பின்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஈரானியத் தூதராகப் பணியாற்றியுள்ளார் என்றும் ஆசிய-பசிபிக் வட்டாரத்துக்கான ஈரானின் துணை வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

(Visited 46 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!