இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்களை ஏற்றி சென்ற விமானம் டுபாயில் தரையிறக்கம்

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்களை ஏற்றிச் செல்லும் விமானம் டுபாயில் தரையிறங்கியுள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவிலிருந்து ஜோர்தானின் Amman நகரத்தில் ஆஸ்திரேலியர்கள் குழு ஒன்று பேருந்தில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையிலான ஷேக் ஹுசைன், ஜோர்தான் நதி மற்றும் வாடி அரபா கடவைகள் எந்த நேரத்திலும் திறக்கப்படலாம் மற்றும் மூடப்படலாம் என்பதால், வெளியேறுபவர்கள் தங்கள் தகவல்களை வழங்குவது முக்கியமாகும்.
இப்பகுதியில் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலிய வான்வெளி மூடப்பட்டுள்ளது.
இன்னும் வெளியேற முயற்சிக்கும் குடிமக்களுக்கு உதவ திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறினார்.
(Visited 1 times, 1 visits today)