இலங்கையில் EPF நிதி செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

பெருந்தொகையான நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான பணத்தை வைப்புச் செய்யவில்லை என பிரதிதொழிலமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
22 ஆயிரத்து 450 இற்கும் அதிகமான நிறுவனங்கள் 36 பில்லியன் ரூபாய் நிதியை செலுத்தவில்லை என கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் 22 ஆயித்து 450 இற்கும் மேற்பட்ட அரச, அரச அனுசரணையில் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான நிதியைச் செலுத்தவில்லை.
தற்போது 36 பில்லியன் ரூபாய் ஊழியர் சேமலாப நிதியத்திற்குச் செலுத்தவேண்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 1 visits today)