இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை! பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்கு தண்ணீர் அருந்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு நிபுணர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ இந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் பாடசாலைக்கு செல்லும் குழந்தையின் வயதைப் பொறுத்து 4 முதல் 6 போத்தல் தண்ணீர் வரை குடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் வெப்பநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
(Visited 13 times, 1 visits today)