இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கைக்கு அடுத்தகட்ட கடனை வழங்குவது தொடர்பில் IMF ஒன்றுகூடல்

இலங்கைக்கு அடுத்த கடன் தவணைக் கொடுப்பனவை வழங்குவது தொடர்பாக ஆராயும் பொருட்டு, எதிர்வரும் வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூடவுள்ளது.

வொசிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அதன் பேச்சாளர் ஜுலி கொசாக் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வு குழு, கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பணிக்குழாம் மட்ட இணக்கப்பாட்டை எட்டியது.

இதன்போது குறிப்பாக கிரய மீட்பு, மின்கட்டண சீராக்கல் மற்றும் சுயமாக நடைமுறையாகும் மின்கட்டண முறைமை ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

இந்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படும் விதத்தின் அடிப்படையில், எதிர்வரும் வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு கூடி இலங்கைக்கான அடுத்தத் தவணைக் கொடுப்பனவு குறித்து தீர்மானிக்கும்.

இதில் இணக்கப்பாடு காணப்பட்டு, இலங்கைக்கான கடன் தொகை அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், இலங்கை உடனடியாக 344 மில்லியன் டொலரை பெறும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்