இந்தியாவிலிருந்து இன்றும் 25 மெட்ரிக் தொன் அத்தியாவசிய மருந்துகள், உலர் உணவுப் பொருட்கள் நாட்டிற்கு
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C-17 சரக்கு விமானம் இன்று (14.12) பிற்பகல் 3 மணிக்கு இந்தியாவின் ஆக்ராவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
நாட்டில் சுகாதார சேவைகளைப் பராமரிப்பதற்காக 25 மெட்ரிக் தொன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் இந்த விமானத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.
பேரிடர் நிவாரணப் பொருட்களை விமானத்திலிருந்து தரையிறக்கிய பின்னர், நாட்டின் மஹியங்கனை பகுதியில் கள வைத்தியசாலையை அமைத்து சேவைகளை முன்னெடுத்த
85 பணியாளர்கள் மற்றும் அவர்களின் மருத்துவ உபகரணங்களின் இருப்புடன் அவர்கள் புறப்பட்டனர்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து இந்திய வைத்தியசாலை பணியாளர்களை அனுப்பி வைத்தார்.
இந்த இந்திய வைத்திய்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் அத்தியாவசிய அறுவை சிகிச்சைகள் உட்பட 7,000 நோயாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த விமானம் மாலை 5.15 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் ஆக்ராவுக்குப் புறப்பட்டது.





