உலகம் செய்தி

ஆயிரக்கணக்கான இம்ரான் கான் ஆதரவாளர்கள் கைது!

முன்னாள் பிரதமரை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி பாகிஸ்தானில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான இம்ரான் கான் ஆதரவாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்ரான் கான், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார், மேலும் அவர் மீது 150 குற்றவியல் வழக்குகள் உள்ளன.

ஆனால் அவருக்கும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சிக்கும் மக்களிடையே இப்போதும் ஆதரவு உள்ளது.

அவர் மீது அரசியல் காரணங்களுக்காக வழக்குகள் போடப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இம்ரான் கான் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் நேரடி போராட்டங்கள் மூலம் அவரை விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு தலைநகர் இஸ்லாமாபாத் நகருக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க எல்லையில் கொள்கலன்களை வைத்தனர்.

மேலும், முக்கிய சாலைகளை துண்டித்து, பிடிஐ கட்சி வலுவாக உள்ள பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணங்களுடன் நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளையும் மூடியிருந்தனர்.

அந்த தடைகளையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4,000 க்கும் மேற்பட்ட இம்ரான் கான் ஆதரவாளர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் பாதுகாப்பு அதிகாரி ஷாகித் நவாஸ் தெரிவித்தார்.

அவர்களில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.

பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் போராட்டங்களை கலைப்பதற்காககண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது.

(Visited 26 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி