ஆட்கடத்தல் – மும்பையில் 80 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் மாயம்
இந்தியாவின் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 36 நாட்களில் 82 சிறுவர்கள் காணாமற் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட 41 சிறுமிகளும் 13 சிறுவர்களும் காணாமல் போயுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுமிகளும் சிறுவர்களும் காணாமல் போனவர்களில் அடங்குவர்.
இந்த சம்பவங்களுக்குப் பின்னால் மனித கடத்தல் இருப்பதாக இந்திய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குர்லா, வகோலா, பவாய், மால்வானி, சகினாகா போன்ற நகரின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் சிறுவர்கள் காணாமற்போனமை
தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.





