செய்தி தமிழ்நாடு

அரசு பேருந்து லாரி மோதியதில் மூன்று பேர் பலி

சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சாலை அருகே குயவன் குளம் எனும் இடத்தில் தொண்டியிலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது ஏதிரே வந்த சிமெண்ட் செங்கல்

ஏற்றி வந்த லாரி மோதியதில் பேருந்தில் பயணம் செய்த ஆர் எஸ் மங்கலம்- கீழக்கோட்டையை சேர்ந்த மூதாட்டி திருப்பதி (60), சிவகங்கை – ராகினிப்பட்டியை சேர்ந்த கங்கா (24), மற்றும் புதுக்கோட்டை- மீமிசலை சேர்ந்த நாக ஜோதி (49) ஆகியோர்  இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இருபதுக்கும்  மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.படுகாயமடைந்தவர்களில்  சிலர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிலர் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று பேர் பலியான இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

(Visited 6 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி