செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் நிதி நெருக்கடியால் மூடப்பட்ட மேலும் ஒரு வங்கி!

நிதி நெருக்கடியால் சிலிக்கான் வேலி வங்கி திவாலான நிலையில் தற்போது மேலும் ஒரு வங்கி மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விவகாரத்தில், வாடிக்கையாளர் முதலீட்டை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க மத்திய வங்கியும் வைப்பு நிதி காப்பீட்டுக் கழகமும் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (SVB) சமீபத்தில் திவாலானது. இதனையடுத்து அமெரிக்க பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.இந்த நிலையில், நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட சிக்நேச்சர் வங்கியும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் இதன் பங்கு விலையும் கடுமையாக சரிந்தது.

தற்போது இந்த வங்கியும் மூடப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அமெரிக்க மத்திய வங்கி, மத்திய வைப்பு நிதி காப்பீட்டுக் கழகம் மற்றும் நிதித் துறை ஆகியவை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,மூடப்பட்டுள்ள சிக்நேச்சர் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர எஞ்சிய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீட்டை எடுக்க விரும்பினால், அதை வழங்க ஏதுவாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி