“அது முட்டாள்தனம்” – அனர்த்தம் குறித்து அரசு மீது வழக்கு தொடுக்கும் எதிர்க்கட்சிக்கு பொன்சேகா பதில்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (நா.உ) பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள் ஊடகங்களிடம் எதிர்க்கட்சியானது தற்போதைய அரசானது பாதிப்புகளைத் தடுக்கத் தவறியதற்காக அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர எதிர்க்கட்சிகள் எடுத்த முடிவு “அபத்தமானது” என்று சரத் பொன்சேகா கூறினார்.
அத்துடன், இந்தச் சூழ்நிலை “முந்தைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் இருந்திருந்தாலும் நிலைமை இதேபோல்தான் இருந்திருக்கும்,” என்று அவர் கூறினார்.
கடந்த காலங்களிலும் வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டதாகவும், எந்த ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் அதன் இறுதி விளைவு ஒன்றாகவே இருந்ததாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்த முறை மழை மற்றும் வெள்ளப் பெருக்கு மிகவும் அதிகமாக இருந்ததால்தான் அழிவு கூடுதலாக உள்ளது என்று பொன்சேகா குறிப்பிட்டார்.
இலங்கையில் வளங்கள், உபகரணங்கள் மற்றும் மனித சக்தி வரையறுக்கப்பட்ட அளவில் (Limited) இருப்பதால், யாரும் அற்புதங்களைச் செய்ய முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
“அரசாங்கம் தன்னிடம் இருக்கும் வளங்கள், உபகரணங்கள் மற்றும் மனித சக்தியை வைத்து அதிகபட்சமானதைச் செய்ய வேண்டும். யாராவது இதைவிட அதிகமாகச் செய்ய விரும்பினால், அது இங்கே சாத்தியமில்லை. நாம் ஒரு ஏழை நாடு.” என்று அவர் தெரிவித்தார்.




