இலங்கை

அதிகரிக்கும் கொலை சம்பவங்கள் : பாதுகாப்பிற்காக முப்படைகளையும் களமிறக்கிய ஜனாதிபதி!

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும்,  அமைதியைப் பேணுவதற்காகவும் 25 நிர்வாக மாவட்டங்களிலும் முப்படையினரையும் களமிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வெளியிடப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 12ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் பிரசூரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தரைப்படை, கடற்படை மற்றும் வான்படை என்பன கொழும்பு,  கம்பஹா,  களுத்துறை,  கண்டி,  மாத்தளை,  நுவரெலியா,  காலி, மாத்தறை,  அம்பாந்தோட்டை,  யாழ்ப்பாணம்,  கிளிநொச்சி,  மன்னார்,  வவுனியா,  முல்லைத்தீவு,  மட்டக்களப்பு,  அம்பாறை உள்ளிட்ட 25 மாவட்டங்களிலும், பணியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!