இலங்கை செய்தி

வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை!

நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காத காரணத்தினால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க அரச அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கானி லியனகே தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு இன்று(வியாழக்கிழமை) எழுத்து மூலம் திணைக்களத்திற்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளை அச்சிடுவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு திறைசேரியிடம் அரசாங்க அச்சக அலுவலகம் பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், இது தொடர்பான கோரிக்கை தொடர்பில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!