இலங்கை செய்தி

ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை

இன்று (07) பிற்பகல் அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த  ரயிலில் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.

வாதுவ, ரத்நாயக்கவில் வசிக்கும் 39 வயதுடைய குருகே நீல் பெரேரா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாதுவ தல்பிட்டிய ரத்நாயக்க வீதியில் புகையிரத கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வாதுவ நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்திர குமாரவின் பணிப்புரைக்கமைய பல்வேறு முறைப்பாடு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை