இலங்கை

நீர்கொழும்பில் தமிழருக்கு நடந்த கொடூரம்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்..

கொழும்பு, மட்டக்குளியைப் பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் சபாரத்தினம் (வயது 51) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

10 மணியளவில் இவரின் வீட்டுக்குள் வாள்களுடன் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கொலையைப் புரிந்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த குடுமபஸ்தரின் உடலில் 10 இற்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன.

சடலம் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் நீர்கொழும்பு பொலிஸார், கொலைச் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லை என்று தெரிவித்தனர்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்