ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாப்பதற்காக லொரிகள் சிலவற்றில் கட்டாய வேக வரம்புச் சாதனம் பொருத்துவது குறித்த தகவல்கள் ஆண்டு இறுதியில் வெளியிடப்படும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. 3,500 கிலோகிராமுக்கு மேல் பாரம் ஏற்றும் லொரிகளில் வேக வரம்புச் சாதனம் பொருத்தவேண்டும்.

அத்தகைய வாகனங்களில் பயணம் செய்யும் வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை அது வலுப்படுத்தும். ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லொரிகள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அது குறித்து ஆராயப்படுகிறது.

சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்வதில் விரைந்து செயல்படவேண்டும் என்று எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் Leon Perera வலியுறுத்தினார்.

வேக வரம்புச் சாதனங்களை மதிப்பிடவும், திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் போக்குவரத்துக் காவல்துறை கலந்தாலோசிப்பதாக உள்துறைத் துணையமைச்சர் Faishal Ibrahim கூறினார்.

உரிய மாற்றங்களைச் செய்து தொழில்நுட்பச் சோதனைகளை நிறைவுசெய்ய அவகாசம் தேவை என்று சம்பந்தப்பட்ட தரப்புகள் கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!