செய்தி

உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலில் பயணித்த அமெரிக்கருக்கு நேர்ந்த கதி

உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலில் இருந்து தவறி விழுந்து அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய உல்லாசப் பயணக் கப்பலில் ஒரு வார கால உல்லாசப் பயணத்திற்காகப் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே கப்பலில் விழுந்து அந்த நபர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆபத்தான நிலையில் இருந்த அவரைக் கப்பலின் ஊழியர்கள் கண்டுபிடித்து தண்ணீரில் இருந்து வெளியே இழுத்த போதிலும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது.

அந்த நபர் ஹோண்டுராஸ் பயணத்தில் புளோரிடாவில் உள்ள ஐகான் ஆப் தி சீஸில் ஏறினார்.

ஞாயிற்றுக்கிழமை காலை கடலில் விழுந்த இவரைக் கப்பல் ஊழியர்கள் அமெரிக்க கடலோரக் காவல்படைக்கு அறிவித்து மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளனர்.

கப்பலின் படகு ஒன்று இந்த நபரை அழைத்து வந்ததாகவும், ஆனால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரியில் தனது முதல் பயணத்தைத் தொடங்கிய ஐகான் ஒப் தி சீஸ், 366 மீட்டர் நீளம் மற்றும் 7,600 பயணிகள் மற்றும் 2,350 பணியாளர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலாகும்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content