இலங்கை

இலங்கையில் வீதி விபத்து – வெளிநாட்டு பெண் பலி

இலங்கையில் சம்பவித்த விபத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியின் பெல்வெஹர பகுதியில், தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கிச் சென்ற வாகனம் ஒன்று கடை ஒன்றின் முன்பாக நிறுத்துவதற்காக வீதியில் இடதுபுறமாகத் திரும்பியது.

அதே திசையில் பயணித்த முச்சக்கர வண்டி அந்த வாகனத்துடன் மோதாமல் இருப்பதற்காக திடீரென வீதியின் வலது பக்கம் திரும்பிய போது எதிர் திசையிலிருந்து வந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு வெளிநாட்டு ஆண்களும் இரண்டு பெண்களும் படுகாயமடைந்ததுடன் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 54 வயதுடைய நெதர்லாந்து பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது .

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்