இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த மர்ம நபர்கள்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவரை இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (10) மாலை 6.30-6.37 மணிக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த வைத்தியர் 32 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அன்றைய தினம் தனது கடமைகளை முடித்துக் கொண்டு, அரசாங்கம் வைத்தியர்களுக்கு வழங்கிய தங்குமிடத்திற்குச் சென்ற அவர், அங்கு இந்த வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். .

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதுவரையில் முழுமையான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அங்குள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்