இந்தியா

பாகிஸ்தானை இந்தியா ஆக்கிரமிக்கக் கூடும்: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

ஜம்மு – காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தானை ஆக்கிரமிக்கக் கூடிய சாத்தியம் நிலவுவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா மொஹமட் அஷீப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த அவர், அவ்வாறான ஆக்கிரமிப்பு இடம்பெறுமாயின் அதற்கு பொருத்தமான பதிலளிப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தானை ஆக்கிரமிப்பதற்கு முயற்சித்து, பாகிஸ்தானுடன் யுத்தத்தில் ஈடுபடுவதற்கு இடமுண்டு.

இது இடம்பெறக் கூடிய விடயமாகும். அவ்வாறு இடம்பெறுவதற்குத் தெளிவான சாத்தியம் காணப்படுகிறது. அதனை எந்தவிதத்திலும் புறக்கணிக்க முடியாது.

நாம் முழுமையாகத் தயாராக உள்ளதுடன் நிலையாகவும் உள்ளோம். எமது வான், தரை மற்றும் கடற்பரப்புக்குள் அத்துமீறல் இடம்பெறுமாயின் அதற்கு பதிலளிக்கப்படும்.

கடவுளின் பெயரில் உரிய பதிலளிப்புகள் வழங்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா மொஹமட் அஷீப் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே