ஐரோப்பா

ஜேர்மனியில் கண்டுப்பிடிக்கப்பட்ட 02ஆம் உலகபோர் காலத்து குண்டு – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

கிழக்கு ஜெர்மனியின் டிரெஸ்டனின் மையப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இன்று (06.08) வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எல்பே நதியை ஒட்டிய பாலங்களில் ஒன்றின் அருகே இரண்டாம் உலகபோர் காலத்து குண்டு கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

கரோலா பாலத்தில் அகற்றும் பணியின் போது 550 பவுண்டுகள் எடையுள்ள பிரிட்டிஷ் தயாரிப்பான வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

“இது ஒரு டெட்டனேட்டர் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் அதை அந்த இடத்திலேயே செயலிழக்கச் செய்ய வேண்டும்,” என்று சட்ட அமலாக்கத் துறை அதிகாரியான பொலிசி சாக்சென் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சுற்றுப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!