பலஸ்தீனத்தை ஆதரிக்கும் உலக நாடுகள் – காசா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்

உலக நாடுகளை பழிவாங்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கும் உடன்படிக்கைக்கு ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா உட்பட 10 நாடுகள் நாளையதினம் ஆதரவு தெரிவிக்கவுள்ளன.
ஐ.நா பொதுச்சபையில் பலஸ்தீனம் தொடர்பான வாக்கெடுப்பின் போது இந்த நாடுகள் ஆதரவை வெளிப்படுத்தவுள்ளனர்.
இந்நிலையில் பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்றையதினம் நடத்திய தாக்குதல் சுமார் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலின் இதுவரையான காலப்பகுதியில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 8 times, 1 visits today)