இலங்கை

மனைவிக்கு பிரியாணி சமைக்கத் தெரியவில்லை – விவாகரத்து கோரிய கணவன் – யாழில் சம்பவம்

தனது மனைவிக்கு பிரியாணி செய்யத் தெரியாததால் விவாகரத்து செய்ய விரும்புவதாகக் கூறி, யாழ். நீதிமன்றத்தில் கணவரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் திகதி யாழ். நீதிமன்றத்தில் டென்மார்க் நாட்டு பிரஜை ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

41 வயதுடைய குறித்த நபர், யாழ்ப்பாணத்தின் உடுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணை நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

குறித்த நபர் பிரியாணியை விரும்பி உண்பவர். ஆனால் அவரது மனைவிக்கு பிரியாணி சுவையாக சமைக்கத் தெரியாத காரணத்தால் தினமும் வீட்டில் வாக்குவாதம் ஏற்படுவதாக அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் வாக்குவாதத்தை விரும்பாத காரணத்தால் சட்டபூர்வமாக அவரிடமிருந்து பிரிந்து செல்வதற்கு அனுமதி கோரி குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!