உலகம் ஐரோப்பா செய்தி

நத்தார் தினத்தில் கடும் குளிர் மற்றும் உறைபனி: வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள புதிய தகவல்

பிரித்தானியாவில் இந்த ஆண்டு நத்தார் தினத்தில் பரவலான பனிப்பொழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வீசும் கடும் குளிர்காற்று காரணமாக இந்த வாரம் வெப்பநிலை பெருமளவு குறைந்தாலும், வளிமண்டலத்தில் நிலவும் உயர் அழுத்தம் காரணமாக மேகமூட்டமான வறண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் சில உயரமான மலைப்பகுதிகளில் லேசான பனிப்பொழிவு காணப்படலாம். தொழில்நுட்ப ரீதியாக நத்தார் தினத்தின் 24 மணிநேரத்தில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு பனித்துளி விழுந்தாலும் அது ‘white Christmas’ ஆக கருதப்படும் என்பதால், சிறிய அளவிலான வாய்ப்புகள் இன்னும் உள்ளதாக மெட் அலுவலகம் (Met Office) தெரிவித்துள்ளது.

பனிப்பொழிவை விட, பெரும்பாலான இடங்களில் நத்தார் தினத்தன்று உறைபனி மற்றும் மூடுபனி அதிகமாகக் காணப்படும் என்றும், அண்மையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இது ஒரு நிம்மதியான செய்தியாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!