அரசியல் இலங்கை செய்தி

கொழும்பு மாநகர சபையில் நாளை நடக்கப்போவது என்ன? அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!

“கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாளை (31) நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் நாளை (31) மீண்டும் முன்வைக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் வினவியபோதே அமைச்சர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.

“ கொழும்பு மாநகரசபையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டம்தான் நாளை மீண்டும் முன்வைக்கப்படுகின்றது.

வரவு- செலவுத் திட்டத்தில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்திருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் விவாதத்தின்போது உறுப்பினர்களால் தகவல்களை வெளியிட்டிருக்க முடியும்.

அவ்வாறு செய்யாமல், அரசியல் ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டே வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்றே நான் கருதுகின்றேன்.

எனவே, அன்று எதிராக வாக்களித்தவர்கள், நாளை ஆதரவாக வாக்களிப்பார்கள் என நம்புகின்றோம். பாதீடு நிறைவேற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

வரவு- செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டு முன்னோக்கி கொண்டு செல்லாம்.”- எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் முதன்முறையாக முன்வைக்கப்பட்டபோது அது தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!