காதலை முறித்த யுவதிக்கு காதலன் செய்த செயல் ;இத்தாலியில் அரங்கேற்றிய பயங்கரம்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/11/இத்தாலி1-jpg.webp)
இத்தாலியில் காதலன் காதலியை கடத்திசென்று கொடூரமாக கொன்று வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் வினிடோ மாகாணத்தில் உள்ள பட்ஹா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயொமெடிக்கல் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவி ஹுலியா சியோஷெத்தின் (22),இவரும் பிலிப்போ டுரிடா (22) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக காதலர்கள் ஹுலியாவும், பிலிப்போவும் பிரிந்தனர்.
கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க புதிய உடை வாங்க கடந்த 16ம் திகதி ஹுலி வணிக வளாகத்திற்கு சென்றபோது தனது முன்னாள் காதலன் பிலிப்போவையும் அழைத்து சென்றுள்ளார்.எனினும் , வணிக வளாகத்திற்கு சென்ற ஹுலி வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக ஹுலியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது, ஹுலியின் வீட்டின் அருகே அவரது முன்னாள் காதலன் பிலிப்போவின் கார் வந்ததை கண்டுபிடித்தனர். அதோடு காரில் வைத்து ஹுலியை பிலிப்போ தாக்கிய நிலையில் , தப்பியோட முயற்சித்த ஹுலியை சரமாரியாக தாக்கிய பிலிப்போ காரில் கடத்தி சென்றுள்ளார்.
பின்னர், தன்னுடனான காதலை முறித்ததால் ஆத்திரமடைந்த பிலிப்போ தனது முன்னாள் காதலி ஹுலியை ஆள்நடமாட்டமற்ற ஏரிக்கரைக்கு கடத்தி சென்று கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்துள்ளார்.பின்னர் உடலை ஏரிக்கரையில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இந்நிலையில் ஹுலியின் உடலை கைப்பற்றிய பொலிஸார் தப்பியோடிய முன்னாள் காதலன் பிலிப்போவை தீவிரமாக தேடி வந்தனர்.
தீவிர தேடுதலுக்கு பின் கிழக்கு ஜெர்மனி சாலைப்பகுதியில் கைது செய்யப்பட்ட பிலிப்போவிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.