ரணில் வகுக்கும் திட்டம் என்ன? அனுரகுமார கேள்வி

ஜனாதிபதி பதவிக் காலம் தொடர்பில் அரசாங்கம் முன்வைக்கத் தயாராகும் திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் திரு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று (11) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதியின் பதவிக்காலம் அரசியலமைப்பு மற்றும் நடைமுறையில் 5 வருடங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
சில முடிச்சுகளை அறுத்துக்கொண்டு ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தை நீடிக்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கருத்து நிலவுவதாகவும், நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 36 times, 1 visits today)