அரசியல் இலங்கை செய்தி

வெனிசுலாவில் நடந்தது இலங்கையிலும் நடக்கலாம்: நாமல் எச்சரிக்கை!

“ நாட்டின் கலாசாரத்தை மறந்து மேற்குலகின் தேவைக்கேற்ப அரசாங்கம் தொடர்ந்து செயல்படுமானால் வெனிசுலாவில் நடந்ததே இலங்கையிலும் நடக்கக்கூடும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“ பாட புத்தகத்தில் உள்ள விடயங்கள் தெரியவில்லையெனில் நாட்டு மக்கள் பற்றி இந்த அரசாங்கம் எப்படி புரிந்துகொள்ளும்?

கலாசாரம், ஆன்மீக பண்பாடு இன்றி நாடு ஏனோ, தானோ என்று சில மேற்குலக நாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பயணிப்பது ஆபத்தானது.

ஏனெனில் நாடொன்றுக்கு (வெனிசுலா) வந்து விமானத்தில் ஜனாதிபதியை கொண்டுசென்றதுபோன்று எமது நாட்டிலும் நடக்கக்கூடும்.

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் எனக் கூறப்பட்டாலும் ஆளுங்கட்சியினருக்கு வேறுபட்ட விதத்தில் செயல்படும் நிலையே காணப்படுகின்றது.

அதேவேளை, பிரதமர் பதவி விலக வேண்டும். கல்விக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு தொடர்பிலேயே அவர் பதவி விலகவேண்டும். “ – என நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.

வெனிசுலா விவகாரம் தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலதிக தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. அந்நாட்டின் பெயரைக்கூட பயன்படுத்தவில்லை.

நாடொன்றுக்குள் புகுந்து ஜனாதிபதியை சிiறிபடித்து சென்றது என்ற வசனம்மூலம் அவர் வெனிசுலாவை விளித்துள்ளார் என்பது புலனாகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!